முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து: 2 பேர் பலி 29 பேர் படுகாயம்

ஆம்பூர் அருகே கூத்தம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

Updated On : 9 ஜனவரி, 2014 at 8:12 AM
பகிர்:

ஆம்பூர் அருகே கூத்தம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 22 பெண்கள் உட்பட 29 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.