முகப்பு
தற்போதைய செய்திகள்

செருப்பால் அடித்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஆசிரியரை தாக்கிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஆசிரியரை தாக்கிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரியிடம் மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்: அரூர் ஒன்றியத்திற்குள்பட்ட சக்கிலப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது.

இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் டி.கலையரசன் என்பவரை, பள்ளித் தலைமை ஆசிரியை ஜ.செல்வராணி கடந்த 6-ஆம் தேதி வகுப்பு நேரத்தில், மாணவர்களின் வருகை மற்றும் தரம் குறித்து அட்டவணையில் குறிப்பிடவில்லை எனக் கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டாராம். அப்போது, திடீரென மாணவர்கள் முன்னிலை ஆசிரியர் டி.கலையரசனை, தலைமை ஆசிரியை செல்வராணி தனது காலணியால் அடித்தாராம்.

இதை கண்டித்து, ஆசிரியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

இதில், நடவடிக்கை எதும் எடுக்கப்படவில்லை எனவும், தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →