தேர்தலில் போட்டியிட தயார்: நந்தன் நீலகேனி
இன்போஸிஸ் நிர்வாக இணை இயக்குநர் நந்தன் நீலகேனி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தனக்கு மிக ஆதரவாக உள்ளதாகவும்
இன்போஸிஸ் நிர்வாக இணை இயக்குநர் நந்தன் நீலகேனி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தனக்கு மிக ஆதரவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் நந்தன் நீலகேகனி பேசியதாவது: காங்கிரஸ் கட்சி என்னுடைய சிந்தனை மற்றும் செயல்திட்டங்களுக்கு மிக ஆதரவாக உள்ளது. வரும் தேர்தலில் போட்டியிட தயாராக உள்னேன் என்றார்.
ஆதர் அடையாள அட்டை திட்டத்தின் இயக்குநராக இன்போஸிஸ் நிர்வாக இணை இயக்குநர் நந்தன் நீலகேனி நியமிக்கப்பட்டார். இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தகவலள் வெளியாகியன. மேலும் அவர் வரும் மேமாதம் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.