படகுகளை விடுவிக்கக் கோரி நாகை ஆட்சியரகம் முன் மீனவர்கள் தீக்குளிப்பு முயற்சி
தங்கள் படகுகளை விடுவிக்கக் கோரி நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முன், மீனவர்கள் தீக்குளிப்புப் போராட்டம் நடத்தி, தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
தங்கள் படகுகளை விடுவிக்கக் கோரி நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகம் முன், மீனவர்கள் தீக்குளிப்புப் போராட்டம் நடத்தி, தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
சுமார் நூற்றுக்கும் அதிகமானோர், ஆட்சியர் வாகனத்தை உள்ளே விட மறுத்து முற்றுகையில் ஈடுபட்டனர். நேற்று இலங்கை விடுவித்த 115 மீனவர்கள் தங்கள் படகுகளையும் விடுவித்துத் தருமாறு கோரி வருகின்றனர். படகுகள் இன்றி தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகிவிட்டதாக அவர்கள் கூறினர்.