சித்தமருத்துவர் வீட்டில் ரூ.10ஆயிரம் ரொக்கம் திருட்டு
சிதம்பரம் கனகசபைநகர் 9-வது கிராஸ் ரோட்டைச் சேர்ந்த கணேஷ்பாபு (40). சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சித்தமருத்துவராக பணியாற்றுகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் ஜன்னல்
சிதம்பரத்தில் அரசு சித்தமருத்துவர் வீட்டில் ரூ.10ஆயிரம் ரொக்கம் திருடு போனது.
சிதம்பரம் கனகசபைநகர் 9-வது கிராஸ் ரோட்டைச் சேர்ந்த கணேஷ்பாபு (40). சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சித்தமருத்துவராக பணியாற்றுகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் ஜன்னல் அருகே உள்ள மேஜையில் ரூ.10ஆயிரத்துடன் கைப்பையை வைத்துவிட்டு தூங்கியுள்ளார். இரவு மர்மநபர் ஜன்னல் வழியாக கையை விட்டு பையிலிருந்து ரூ.10ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கணேஷ்பாபு அளித்த புகாரின் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.