முகப்பு
தற்போதைய செய்திகள்

நீதிமன்ற உத்தரவு என்பதால் தடையை மீறி போகவில்லை : திருமாவளவன் பேட்டி

நத்தம் காலனிக்கு இளவரசன் நினைவு நாளில் அரசியல் கட்சியினர் நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், நீதிமன்ற தடையை மீறிப் போகவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

நத்தம் காலனிக்கு இளவரசன் நினைவு நாளில் அரசியல் கட்சியினர் நுழைய நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், நீதிமன்ற தடையை மீறிப் போகவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.

கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இளவரசன் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்த தருமபுரி செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சியினர் யாரும் தருமபுரிக்கு போகக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதாலேயே போகவில்லை. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு, ஜனநாயக விரோதமானது.

அரசியல் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும், தமிழக அரசு தலித் விரோதமாக செயல்படுவதாகவும், ராமதாஸின் ஜாதி வெறி அரசியலைக் கண்டு தமிழக அரசு அஞ்சுகிறதோ என்று சந்தேகமாக உள்ளது என அவர்  குற்றச்சாட்டினார்.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து கட்சியினரிடையே கருத்து கேட்க தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்யவுள்ளதாகவும் அவர் கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →