சக மாணவனின் உயிரை காக்க களமிறங்கிய கல்லூரி மாணவிகள்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உயிர் காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை சுரண்டை அரசு கல்லூரி மாணவிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உயிர் காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை சுரண்டை அரசு கல்லூரி மாணவிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், ராஜபாண்டி கிராமத்தை சேர்ந்த பி. சொக்கலிங்கபாண்டியன் (19). இவர் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இம்மாணவனின் மூளையில் புற்றுநோய் தாக்கியதில் மிகவும் பாதிக்கப்பட்டான். சிகிச்சைக்காக சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் மாணவன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
தங்களுடன் பயிலும் மாணவன் சொக்கலிங்கபாண்டியன், மருத்துவமனையில் உயர் சிகிச்சை பெறுவதற்கு போதிய நிதி இல்லாத நிலையில் மாணவனின் குடும்பம் மிகவும் தவித்து வருகிறது. ஆகவே தமிழக அரசு மாணவனின் உயர் சிகிச்சைக்கு நிதி அளித்து உயிரைக் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர், மாணவிகள் 50 க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.