ஜூலை 14,15-ல் சிதம்பரம் அரசு கல்லூரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2014-15 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 14,15 தேதிகளில் நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர்
சிதம்பரம் அருகே சி.முட்லூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2014-15 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 14,15 தேதிகளில் நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு: கலந்தாய்வுக்கான காலி இடங்கள் விபரங்கள், பாடவாரியாக கல்லூரி அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு விபரம்: ஜூலை 14 காலை 10 மணி- அனைத்து அறிவியல் பாடங்கள், ஜூலை 15-ம் தேதி காலை 10 மணி- அனைத்து கலை மற்றும் வணிகவியல் பாடங்கள்