முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பூட்டிய வீட்டில் பெண் மர்மசாவு!

சிதம்பரம் எம்.கே.தோட்டம் தோப்புத்தெருவைச் சேர்ந்த மாரியப்பன். இவர் கடந்த சில வருடங்கள் முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி ராஜகுமாரி (45). இவர்களுக்கு இரண்டுமகன், ஒரு மகள் உள்ளனர். மகள்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:52 AM
பகிர்:

சிதம்பரம் நகரில் பூட்டிய வீட்டில் காயங்களுக்கு 45 வயது மதிக்கத்தக்கல் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

சிதம்பரம் எம்.கே.தோட்டம் தோப்புத்தெருவைச் சேர்ந்த மாரியப்பன். இவர் கடந்த சில வருடங்கள் முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி ராஜகுமாரி (45). இவர்களுக்கு இரண்டுமகன், ஒரு மகள் உள்ளனர். மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜகுமாரி சனிக்கிழமை வீட்டின் உள்புறமும், வெளிப்புறமும் தாழ்ப்பாள் போட்டுள்ள நிலையில் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.