முகப்பு
தற்போதைய செய்திகள்

முதலை கடித்து காலை இழந்த மாணவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு

சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த வி.கனகராஜ் மகன் கே.ஹரீஸ் என்ற மாணவர் கடந்த மே.20-ம் தேதி பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை கடித்து இடது காலை

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:52 AM
பகிர்:

சிதம்பரம் அருகே முதலை கடித்து இடதுகாலை இழந்த மாணவருக்கு தமிழகமுதல்வர் உத்தரவின் பேரில் இழப்பீடு தொகை ரூ.3லட்சம் வழங்கப்பட்டது.

சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த வி.கனகராஜ் மகன் கே.ஹரீஸ் என்ற மாணவர் கடந்த மே.20-ம் தேதி பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது முதலை கடித்து இடது காலை இழந்தார். இதுகுறித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தமிழக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கடிதம் அளித்தார். இதனையடுத்து தமிழக முதல்வர் மேற்கண்ட மாணவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.

முதல்வரின் ஆணைப்படி மாணவர் கே.ஹரீஷ் மற்றும் அவரது தந்தை கனகராஜ் ஆகியோரிடம் சிதம்பரம் வனச்சரக அலுவலர் எல்.ரவிச்சந்திரன் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.