சிதம்பரத்தில் குரூப்-1 தேர்வு: 2001 பேர் தேர்வெழுதினர்
சப்-கலெக்டர், டி.எஸ்.பி., பதவிகளுக்கான 79 காலியிடப்பணிகளுக்கு இன்று குரூப் 1 தேர்வு சிதம்பரம் நகரில் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மெட்ரிக்
சிதம்பரத்தில் 5 மையங்களில் குரூப்-1 தேர்வு 2001 பேர் தேர்வெழுதினர்.
சப்-கலெக்டர், டி.எஸ்.பி., பதவிகளுக்கான 79 காலியிடப்பணிகளுக்கு இன்று குரூப் 1 தேர்வு சிதம்பரம் நகரில் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி, நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய 5 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் நகரில் 5 மையங்களில் 4631 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 2630 பேர் தேர்வு எழுத வரவில்லை. 2001 பேர் தேர்வெழுதினர். தேர்வு மையங்களை சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் சிதம்பரம் நகரில் 5 மையங்களையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.