முகப்பு
தற்போதைய செய்திகள்

திருக்கோவிலூர் அருகே குளத்து நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

திருக்கோவிலூர் அருகே கோட்டமருதூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரபோத். 13 மணமுண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:56 AM
பகிர்:

திருக்கோவிலூர் அருகே கோட்டமருதூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரபோத். 13 மணமுண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

ஞாயிற்றுக் கிழமை சக மாணவர்களுடன் மிகவும் பழைமையான வற்றாமல் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றார். உடன் வந்தவர்கள் வீடு திருபினர். இவர் மட்டும் திரும்பவில்லை. பெற்றோர் உறவினர்கள் தேடினர். பின்னர் இன்று அதிகாலை குளத்துக்கு சென்ற அவர்கள், மாணவனின் ஆடைகள் குளக் கரையில் இருந்ததைக் கண்டனர். பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இன்று காலை மாணவன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →