முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கு: கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் செல்வகணபதி ஆஜர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு பேசியதாக பதியப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி செல்வகணபதி, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.கடந்த ஆண்டு மே

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:31 AM
பகிர்:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு பேசியதாக பதியப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்பி செல்வகணபதி, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.கடந்த ஆண்டு மே மாதம் 15-ஆம் தேதி திமுக சார்பில் கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே சேது சமுத்திரத் திட்ட விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அந்தக் கட்சியின் மாநில தேர்தல் பணிச் செயலாளர் செல்வகணபதி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசினாராம். இதையடுத்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடர்ந்தது தமிழக அரசு.

கிருஷ்ணகிரி முதன்மை நீதிமன்றத்தில், வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட செல்வகணபதி நேரில் ஆஜரானார்.  இந்த வழக்கு தொடர்பான ஆவனங்களை தமிழக அரசு நீதிமன்றத்தல் தாக்கல் செய்யாததால், வழக்கை ஜூலை 14-ஆம் தேதிக்கு நீதிபதி யூசூப் அலி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →