முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து இறந்த ஆண் மயில்!

சிதம்பரம் அருகே சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள சிவன்கோயில் அருகே இரண்டரை வயதுடைய ஆண் மயில் ஒன்று மின்சாரம் பாய்ந்து இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து இறந்த மயிலை வனத்துறையினர் கைப்பற்றி புதைத்தனர்.

சிதம்பரம் அருகே சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள சிவன்கோயில் அருகே இரண்டரை வயதுடைய ஆண் மயில் ஒன்று மின்சாரம் பாய்ந்து இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சிதம்பரம் வனச்சரக அலுவலர் எல்.ரவிக்குமார் தலைமையில் வனத்துறையினர் சென்று மயிலை கைப்பற்றி, புவனகிரி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மயிலின் உடலை புவனகிரி வெள்ளாற்றங்கரையில் புதைத்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.