முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ஏர்ஹாரன் பொருத்திய பேருந்துகள் மீது வழக்குப் பதிவு

சிதம்பரத்தில் பொதுமக்களும் பெரும் இடையூறு ஏற்படுத்தி வந்ததால் ஏர்ஹாரன் பொருத்தியுள்ள பேருந்துகளை பிடித்து போலீஸார் வழக்குப் பதிந்து அபராதம் விதித்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

சிதம்பரத்தில் பொதுமக்களும் பெரும் இடையூறு ஏற்படுத்தி வந்ததால் ஏர்ஹாரன் பொருத்தியுள்ள பேருந்துகளை பிடித்து போலீஸார் வழக்குப் பதிந்து அபராதம் விதித்தனர்.

சிதம்பரம் நகரில் பேருந்துகளில் விதிமுறைகளுக்கு புறம்பாக பேருந்துகளில் ஏர்-ஹாரன் பொருத்தப்பட்டு பெரும் சத்தத்தை ஏற்படுத்துவதால், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் உள்ளவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர், பிரகாஷ் மற்றும் போலீஸார் புதன்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் ஏர்-ஹாரன் பொருத்தியுள்ள 21 பேருந்துகளை பிடித்து, வழக்குப் பதிவு செய்து, தலா ரூ.ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.