சிதம்பரத்தில் ஏர்ஹாரன் பொருத்திய பேருந்துகள் மீது வழக்குப் பதிவு
சிதம்பரத்தில் பொதுமக்களும் பெரும் இடையூறு ஏற்படுத்தி வந்ததால் ஏர்ஹாரன் பொருத்தியுள்ள பேருந்துகளை பிடித்து போலீஸார் வழக்குப் பதிந்து அபராதம் விதித்தனர்.
சிதம்பரத்தில் பொதுமக்களும் பெரும் இடையூறு ஏற்படுத்தி வந்ததால் ஏர்ஹாரன் பொருத்தியுள்ள பேருந்துகளை பிடித்து போலீஸார் வழக்குப் பதிந்து அபராதம் விதித்தனர்.
சிதம்பரம் நகரில் பேருந்துகளில் விதிமுறைகளுக்கு புறம்பாக பேருந்துகளில் ஏர்-ஹாரன் பொருத்தப்பட்டு பெரும் சத்தத்தை ஏற்படுத்துவதால், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் உள்ளவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர், பிரகாஷ் மற்றும் போலீஸார் புதன்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் ஏர்-ஹாரன் பொருத்தியுள்ள 21 பேருந்துகளை பிடித்து, வழக்குப் பதிவு செய்து, தலா ரூ.ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.