சிதம்பரம் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற ஜூன் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. ஜூலை 3-ம் தேதி தேர்த்திருவிழாவும், 4-ம் தேதி
சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் நகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து சனிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றியது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் வருகிற ஜூன் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. ஜூலை 3-ம் தேதி தேர்த்திருவிழாவும், 4-ம் தேதி ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சிதம்பரம் நகராட்சியும், காவல்துறையும் இணைந்து தேரோடும் நான்கு வீதிகளிலும் உள்ள நடைபாதை கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் நான்கு வீதிகளும் விசாலமாக காட்சியளித்தது.