போராட்டத்துக்கு ஆதரவு : மதுரையில் பழ.நெடுமாறன் கைது
மதுரையில் பூரண மதுவிலக்குக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் பூரண மதுவிலக்குக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.
சட்டக்கல்லூரி மாணவி நந்தினி பூரண மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தி வருகிறார். அவ்வப்போது, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் அவர், இன்று அவரது தந்தை ஆனந்தனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வந்தார்.
அவருக்கு ஆதரவாக தமிழர் இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உடன் வந்தார். இதை அடுத்து, பழ.நெடுமாறன், ஆனந்தன், நந்தினி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.