முகப்பு
தற்போதைய செய்திகள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த சிறுகனூர் அருகேயுள்ள திருப்பட்டூர் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் இல்லாததனை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:44 AM
பகிர்:

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த சிறுகனூர் அருகேயுள்ள திருப்பட்டூர் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் இல்லாததனை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பட்டூர் மேலத்தெருவைச் சேர்ந்த 1- வது வார்டு மற்றும் 2- வது வார்டில் 1500- க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் இல்லாததனை திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோரிடம் பல முறை மனு செய்தும் அதிகாரிகள் குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை 8 மணிக்கு திருப்பட்டூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயிலான பிரம்மபுரீஸ்வரர் கோயில் முன்பு காலி குடங்களுடன் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் எம்.ஆர்.பாளையம் திருப்பட்டூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சமயபுரம் போலீஸார் ஆய்வாளர் மனோகரன் வந்திருந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியலை கைவிட்டனர்.   

முழு கட்டுரையைப் படிக்க →