கேரளத்துக்கு கடத்த முயற்சி: 600 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இனயம் சின்னத்துறை பகுதியில் வாகன
நித்திரவிளை அருகே மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 600 லிட்டர் மண்ணெண்ணெய்யை பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இனயம் சின்னத்துறை பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் அப்பகுதி வழியே வந்த மினி டெம்போவை நிறுத்த சைகை காட்டினர். நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் சிறிது தூரம் துரத்திச் சென்று பிடித்தனர்.
தொடர்ந்து வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் 3 பேரல்கள் மொத்தம் 600 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்திருந்ததும் அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. மண்ணெண்ணெய் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பறக்கும்படை தாசில்தாராக கண்ணன் பதவியேற்ற மறுநாள், கேரளத்துக்கு கடத்த முயன்ற மண்ணெண்ணெய்யை பறிமுதல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement