முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநெல்வேலி அருகே அரசு பஸ்கள் மோதல்: 60 பேர் காயம்

திருநெல்வேலி அருகே இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 60 பேர் காயம் அடைந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே இரு அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 60 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற பேருந்தும், மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற பேருந்தும் கோவில்பட்டி சாலையில் ராமையம்பட்டி அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், ஒரு 108 ஆம்புலன்ஸும் சேர்ந்து மோதியது. இந்த விபத்தில், பஸ்களில் பயணம் செய்த 60 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் இருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்த அனைவரும் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →