முகப்பு
தற்போதைய செய்திகள்

அணைகள் மூடப்பட்டதால் நெல்லை மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் பாதிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே  அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே  அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தேவையில்லாத காரணத்தாலும், கடந்த சில தினங்களுக்கு முன் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததாலும் பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் மூடப்பட்டன.

பருவ மழை குறைந்த காரணத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை. அணைகளின் நீர்மட்டம் குறைந்து காணப்படுவதால்  கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் குடிநீர் தட்டுபாடு எழாமல் சமாளிக்க வேண்டியுள்ளது.புதன்கிழமை (மார்ச் 12 ம் தேதி) அணைகளின் நீர்மட்டம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51.25 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 64.53 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.02 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 38.10 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 25.00 அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 23.38 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 31 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 15.77 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. அணைகளுக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.

அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் தாமிரவருணி ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் ஆற்றில் உள்ள குடிநீர் திட்ட உறைகிணறுகளுக்கு போதிய நீர் ஆதாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆகவே அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →