முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி காட்டூர் அருகே டிரெய்லர் லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

திருச்சி காட்டூர் அருகே நின்று கொண்டிருந்த டிரெய்லர் லாரி மீது கார் மோதி 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

திருச்சி காட்டூர் அருகே நின்று கொண்டிருந்த டிரெய்லர் லாரி மீது கார் மோதி 2 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

மதுரை மாவட்டம் கணபதி நகர் நேரு தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் 55 லாரி புக்கிங் ஆபிஸ் கிளர்க் அவரது மகன் பாஸ்கர் 31 உதயகுமார் மனைவி பானுமதி 50 ஆகிய மூவரும் மகனுக்கு தோஷம் கழித்து வர ஒரு காரில் திருநாகேஸ்வரம் சென்றனர்.

திருச்சி காட்டூர் மஞ்சள்திடல் பாலம் அருகே வந்தபோது, அங்கே நின்று கொண்டிருந்த டிரெய்லர் லாரி மீது கார் மோதியது. இதில்  சம்பவ இடத்திலேயே உதயகுமார், பாஸ்கர் இருவரும் உயிரிழந்தனர் . திருவெறும்பூர் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.