முகப்பு
தற்போதைய செய்திகள்

கலசலிங்கம் மாணவர்களுக்கு துபாய் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

துபாய் நிறுவனம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்திய வளாக நேர்காணலில் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

Updated On : 14 மார்ச், 2014 at 3:45 PM
பகிர்:

துபாய் நிறுவனம், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடத்திய வளாக நேர்காணலில் இயந்திரவியல் துறை இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு பெற்றனர்.

துபாயில் உள்ள பெர்கோ சர்ட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குநர்கள் ரமேஷ்மேனன், நாரா ஆகியோர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் வந்திருந்து வளாக நேர்காணலை நடத்தினர்.
இதில் இறுதியாண்டு பி.டெக். இயந்திரவியல் மாணவர்கள் ஸ்ரீராம், மனோஜ்வர்தன் ஆகியோர் தேர்வு பெற்றனர்.

இவர்களுக்கு துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர் முன்னிலையில், வேந்தர் க.ஸ்ரீதரன் பணி நியமன உத்தரவை வழங்கி பாராட்டினார். பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.