முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி அருகே வாகனச் சோதனையின் போது ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மற்றும் 100 சில்வர் குடம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள சுங்கசாவடியில் இன்று தேர்தல் பிரிவு அலுவலர் நடராஜன் தலைமையில் வாகனச் சோதனை நடந்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள சுங்கசாவடியில் இன்று தேர்தல் பிரிவு அலுவலர் நடராஜன் தலைமையில் வாகனச் சோதனை நடந்தது.

அப்போது கும்பகோணத்தில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தில் யணம் செய்யத கரூர் மாவட்டம் குளித்தலை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்துவிடம் ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் உரிய ஆவணம் இல்லாததல் பணத்தை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்றுச்செல்லுமாறு அறிவுறுத்த்தினர்.

மேலும் இதே பேருந்தில் 100 சில்வர் குடம் இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது  அந்த குடத்துக்கு யாரும் உரிமை கோராததால் அவற்றையும் கைப்பற்றி திருவரம்பூர் தாசிலதாரிடம் தேர்தல் பிரிவு அலுவலர்கள்  ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.