அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு ஏ.டி.எம்.கார்டுகள் வைத்திருந்த இருவர் கைது
திருச்சி புத்தூர் அருகே பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.மில் இன்று 2 பேர் பணம் எடுக்க வந்தனர். அதிஅ எண்ணிக்கையில் ஏடிஎம் கார்டுகள் அவர்கள் பயன்படுத்தியதைக் கண்ட மற்ற
திருச்சி புத்தூர் அருகே பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்.மில் இன்று 2 பேர் பணம் எடுக்க வந்தனர். அதிஅ எண்ணிக்கையில் ஏடிஎம் கார்டுகள் அவர்கள் பயன்படுத்தியதைக் கண்ட மற்ற வாடிக்கையாலர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் அவர்களை விசாரித்ததில் திருச்சி கருமண்டம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கனி மகன் முபாராக்(23) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மணி மகன் ராஜா(24) என்பதும், இவர்கள் வெளிநாட்டு ஏடிஎம் கார்டுகள் வைத்திருந்ததும் கண்டிபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.