முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட மத்திய அரசு: ஜெயலலிதா குற்றசாட்டு
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று திண்டுக்கல்லில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் முல்லைப் பெரியாறு
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று திண்டுக்கல்லில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டது என்று குற்றம்சாட்டினார்.
மேலும் . மத்தியில் அங்கம்வகித்த திமுக முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவில்லை என்றும் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவோம் என திமுக கூறுவது ஏமாற்று வேலை என்றும் தெரிவித்தார். மேலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட காங்கிரஸ், திமுகவை வீழ்த்த, அதிமுவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார்.