சேலத்தில் இன்று ரயில்வே சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத பிரசாரம்
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத பிரசாரம் வியாழக்கிழமை (மார்ச் 27) தொடங்கப்படுகிறது.
சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத பிரசாரம் வியாழக்கிழமை (மார்ச் 27) தொடங்கப்படுகிறது.
காலை 9 மணியளவில் கோட்ட மேலாளர் சுப்ரான்ஷூவால் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட உள்ள இந்த பாதுகாப்பு விழிப்புணர்வு ரத பிரசாரம், மேட்டூர், மொரப்பூர், மாவேலிப்பாளையம், தொட்டிபாளையம், சூலூர் ரயில் நிலையங்களுக்கு இடையிலான கிராமங்களிலும் இரு நாள்கள் நடைபெறுகிறது.
உயர் அழுத்த மின்சார வயர்கள் செல்லும் இடங்களிலும், ரயில்வே மின்சாதனப் பொருள்கள் இருக்கும் இடங்களிலும் பயணிகள், பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருந்து உயிரைக் காத்துக் கொள்வது என்பது குறித்து இந்த பிரசாரத்தில் விளக்கப்பட உள்ளதாக ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement