முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை சேர்ந்த பெண்களிடம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளை

கோவை மகாலிபாளையம் அருகே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சென்னைய சேர்ந்த பெண்களிடம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:09 AM
பகிர்:

கோவை மகாலிபாளையம் அருகே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த சென்னைய சேர்ந்த பெண்களிடம் 7 பவுன் தங்க நகைகைளை மர்ம கும்பல் இன்று சனிக்கிழமை அதிகாலை கொள்ளையடித்துச் சென்றது.

வெவ்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவை சென்ற சென்னைய சேர்ந்த ஜெயந்தி, பிரேமா மற்றும் பத்மாவதி அவர்களிடம் ரயிலில் இருந்த கொள்ளை கும்பல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மகாலிபாளையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது தூங்கிக்கொண்டிருந்த  ஜெயந்தியிடம் 4 பவுன் நகையும், பிரேமாவிடம் 3 பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துள்ளனர். பத்மாவதியுடம் பறிக்க முயன்ற விழித்துக்கொண்டதால் நகைகளை பறிக்க முடியாமல் ரயிலில் இருந்து தப்பித்து சென்றுவிட்டனர்

இதுகுறித்து மூவரும் கோவை ரயில்வே போலீசாரிடம் புகார் செய்தனர்.

இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →