ஸ்ரீவீரநாரயணப்பெருமாள் கோயில் கருட சேவை உற்சவம்!
பிரம்மோற்சவம் கடந்த மே.6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை கருடசேவை உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை, மாலை இருவேளையும் கருட வாகனத்தில் ஸ்ரீவீரநாராயணப்
காட்டுமன்னார்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பிரம்மோற்சவம் கடந்த மே.6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை கருடசேவை உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை, மாலை இருவேளையும் கருட வாகனத்தில் ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவ உபயதாரர் நாட்டு சின்னப்பன்னை நிறுவனத்தார் மற்றும் நகர பிரமுகர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை செயல்அலுவலர் வேங்கடகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் என்.தோத்தாத்திரி ஆகியோர் செய்திருந்தனர்.