இஸ்கான் கோயிலில் நாளை ஸ்ரீ நரசிம்ம சதுர்தசி
இஸ்கான் சார்பில் பகவான் நரசிம்மரின் அவதார நாள் சேலத்தில் செவ்வாய்க்கிழமை (மே 13) கொண்டாடப்படுகிறது.
இஸ்கான் சார்பில் பகவான் நரசிம்மரின் அவதார நாள் சேலத்தில் செவ்வாய்க்கிழமை (மே 13) கொண்டாடப்படுகிறது.
சேலம் கருப்பூர் கரும்பாலை பேருந்து நிறுத்தம் பகுதியில் அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்க (இஸ்கான்) ஆலயம் உள்ளது. இங்கு பகவான் நரசிம்மரின் அவதார தினமான ஸ்ரீ நரசிம்ம சதுர்தசி விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி அன்று மாலை 6.30 மணியளவில் சிறப்பு பஜனை நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு அபிஷேகமும், 7.30 மணிக்கு நரசிம்ம தேவரின் லீலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 8.30 மணியளவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
Advertisement
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இஸ்கான் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.