திருச்சியில் 1.2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் புதன் கிழமை நேற்று இரவு சிங்கப்பூர் டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த இருவரிடம் சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இருவரிடமும் தலா 600 கிராம் கடத்தல் தங்
திருச்சி விமான நிலையத்தில் புதன் கிழமை நேற்று இரவு சிங்கப்பூர் டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த இருவரிடம் சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இருவரிடமும் தலா 600 கிராம் கடத்தல் தங்கம் இருந்ததைக் கண்டறிந்தனர். மன்னார்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன், செல்வம் என இருவரிடமும் சேர்த்து 1.2 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்து, இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.