சேலம் மாநகராட்சியில் இன்று குறை கேட்பு கூட்டம்
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (மே 20) பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (மே 20) பொதுமக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் க.இரா.செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து சேலம் மாநகரில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை கேட்புக் கூட்டங்கள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
Advertisement
இந்நிலையில், தேர்தல் முடிவடைந்து நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் வாராந்திர குறை கேட்பு கூட்டத்தை மாநகராட்சி அலுவலகத்தில் 20-ம் தேதி காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட பொதுமக்கள், தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுவாக எழுதி, மாநகர மேயரிடம் வழங்கி, கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று க.இரா.செல்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.