போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றவர் கைது
இலங்கையைச் சேர்ந்த பிரதீபன் (28) என்பவர் கடந்த 2007ல் இலங்கையில் இருந்து தமிழகம் வந்து சென்னையில் தங்கியிருந்தார். இங்கேயே திருமணம் செய்து கொண்டு, மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில்,,
போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்றவர் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்த பிரதீபன் (28) என்பவர் கடந்த 2007ல் இலங்கையில் இருந்து தமிழகம் வந்து சென்னையில் தங்கியிருந்தார். இங்கேயே திருமணம் செய்து கொண்டு, மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில்,, மனைவியுடன் இலங்கைக்குச் செல்ல அவர் மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அவரிடம் வைத்திருந்த பாஸ்போர்ட் போலியானது என்பது குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, அவரை பெருங்குடி போலீஸார் விசாரணை செய்து கைது செய்தனர்.