முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் ஸ்ரீலஸ்ரீ மெளன சுவாமிகள் குருபூஜை விழா

குருபூஜையை முன்னிட்டு மடத்தில் வீற்றுள்ள ஸ்ரீமெளன சுவாமிகள் என்கிற ஸ்ரீகங்காதரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. திரளான சிவனடியார்கள் பங்கேற்று தரிசித்தனர். முன்னதாக

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:21 AM
பகிர்:

சிதம்பரம் சபாநாயகர்தெருவில் உள்ள ஸ்ரீமெளன சுவாமிகள் மடத்தில் ஸ்ரீலஸ்ரீ மெளன சுவாமிகள் குருபூஜை விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

குருபூஜையை முன்னிட்டு மடத்தில் வீற்றுள்ள ஸ்ரீமெளன சுவாமிகள் என்கிற ஸ்ரீகங்காதரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. திரளான சிவனடியார்கள் பங்கேற்று தரிசித்தனர். முன்னதாக சிவனடியார்கள் பங்கேற்ற மாகேஸ்வரபூஜை நடைபெற்றது. மடாதிபதி ஸ்ரீமெளன சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை நடத்தி வைத்தார். மதியம் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.