சிதம்பரம் காமராஜ் சிறப்பு பள்ளி 100 சதவீத தேர்ச்சி
சிதம்பரம் அருகே வயலூரில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலை சிறப்புப்பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
சிதம்பரம் அருகே வயலூரில் உள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலை சிறப்புப்பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதி 49 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியைச் சேர்ந்த மாணவர் டி.அக்க்ஷய் 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவர் வி.அரவிந்த், மாணவி எஸ்.செனந்தர்யா ஆகிய இருவரும் 492 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி பி.பிரியங்கா 491 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
490 மதிப்பெண்களுக்கு மேல் 6 மாணவர்களும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 28 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 13 மாணவர்களும், கணித பாடத்தில் 8 மாணவர்களும், சமூகஅறிவியல் பாடத்தில் 4 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன், டிரஸ்டி எஸ்.மனோண்மணி, முதல்வர் எஸ்.மீனாட்சி ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
Advertisement