விழுப்புரத்தில் மழை பெய்தது
விழுப்புரம் பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
விழுப்புரம் பகுதியில் சனிக்கிழமை மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இரவு 9 மணியளவில் லேசான தூறலுடன் கூடிய மழை பெய்தது. பின்னர், மழை வலுக்கத் தொடங்கி சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால், சாலையில் மழைநீர் வழிந்தோடியதுடன், பள்ளமான பகுதிகளில் நீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.