முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாநகராட்சி பெண் கவுன்சிலரை கட்சியிலிருந்து நீக்கி எஸ்டிபிஐ நடவடிக்கை

எஸ்டிபிஐ கட்சியின்  திருநெல்வேலி மாநகராட்சி 36 ஆவது மாமன்ற உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி தலைமை

Updated On : 5 நவம்பர், 2014 at 4:01 PM
பகிர்:

எஸ்டிபிஐ கட்சியின்  திருநெல்வேலி மாநகராட்சி 36 ஆவது மாமன்ற உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, அக் கட்சியின் மாவட்டத் தலைவர் உஸ்மான் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாநகராட்சி தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில்,மேலப்பாளையம் 36ஆவது வார்டு வேட்பாளராக மைதீன் பாத்து போட்டியிட்டுவெற்றி பெற்றார். ஆனால், வெற்றி பெற்ற நாள் முதல் வார்டு மக்களுக்கு எந்தவித பணிகளும் செய்துதரவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும், வார்டு பிரச்னைகள் தொடர்பாக மாமன்றக் கூட்டத்திலும் குரல் எழுப்பாமல் அமைதியாக இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

Advertisement

இதுதொடர்பாக, மாமன்ற உறுப்பினரிடமும், அவரது கணவரான செய்யது அப்துல் காதரிடமும் கட்சியின் நிர்வாகிகள் புகார் தெரிவித்து மக்கள் பணி செய்ய வலியுறுத்தப்பட்டது. இதன்பிறகும், மக்கள் பணி செய்யாமலும், கட்சியின் கொள்கை அடிப்படையில் இயங்காமலும் இருந்து வந்தனர். இதையடுத்து இருவரையும் கட்சியின் அடிப்படை செயல்வீரர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கி கட்சியின் மாநிலத் தலைமைக் குழு உத்தரவிட்டுள்ளதாக உஸ்மான் கான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.