முகப்பு
தற்போதைய செய்திகள்

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த சாராய வியாபாரி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 13 நவம்பர், 2014 at 1:14 PM
பகிர்:

கடலூரைச் சேர்ந்த சாராய வியாபாரி தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் அடுத்த வண்டிக்குப்பம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் கங்காதுரை(28). இவர் பல்வேறு சாராய வழக்குகளில் தண்டனை அனுபவித்துள்ள நிலையில் மீண்டும், புதுச்சேரியில் இருந்து 120 லிட்டர் சாராயம் கடத்தி வந்தபோது கடலூர் மதுவிலக்கு போலீஸôரால் கைது செய்யப்பட்டார்.

கங்காதுரையை பலமுறை கைது செய்தும், திருந்தாமல் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதைத் தடுக்கும் பொருட்டு, எஸ்பி ஆ.ராதிகா பரிந்துரையை ஏற்று ஆட்சியர் சுரேஷ்குமார், சாராய வியாபாரி கங்காதுரையை ஓராண்டு தடுப்புக்காவலில் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை, கடலூர் மத்திய சிறையில் உள்ள கங்காதுரையிடம் கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் புதன்கிழமை வழங்கினர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.