சேலத்தில் ஒரே நாளில், ஒரே மாதிரி இரண்டு வீடுகளில் திருட்டு
சேலத்தில் ஒரே நாளில், ஒரே மாதிரி இரண்டு வீடுகளில் திருட்டு சேலம் அழகாபுரம் சம்பந்தன் தெருவைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் காகித வியாபாரம் செய்து வருகிறார். அவர் குடும்பத்துடன் ஷீரடி கோயில் சென்றிருந்தார்.
சேலம் அழகாபுரம் சம்பந்தன் தெருவைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் காகித வியாபாரம் செய்து வருகிறார். அவர் குடும்பத்துடன் ஷீரடி கோயில் சென்றிருந்தார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவையும் உடைத்து அதில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்தனர்.
பாண்டியன் ஷீரடி சென்று விட்டு வீடு திரும்பியதும் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
சேலம் குமாரசாமிபட்டியில் மருத்துவர் ஒருவரது வீட்டிலும் இதுபோன்றத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்த போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 22 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சேலத்தில் ஒரே நாளில், ஒரே மாதிரி இரண்டு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.