காரைக்காலில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
காரைக்காலில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்காலில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் தேனூர் அரசு உயர் நிலைப்பள்ளி, மற்றும் திருநல்லாறு அரசு உயர் நிலைப் பள்ளி, தந்தைப் பெரியாறு அரசு மேல் நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு வெடி குண்டு வைக்கப்போவதாக கடிதம் எழுதி காரில் சென்ற மர்ம நபர்கள் பள்ளி மாணவர் ஒருவரிடம் கொடுத்து சென்றுள்ளனர். அந்த பள்ளி மாணவர் தேனூர் அரசு உயர் நிலைப் பள்ளி துணை முதல்வர் ரஞ்சித் சுந்தரிடம் கொடுத்தார்.
கடிதத்தை பிரித்து படித்த துணை முதல்வர் தகவல் அறிந்ததும் காரைக்கால் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பழனி வேலு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் அந்த கடிதத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.