இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்த போலீஸார் படுகாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ராஜாராம் (31). இவர் சிவகாசியில் உள்ள தனி ஆயுதப்படையில் போலீஸாராக உள்ளார். வேலைக்குச் செல்வதற்காக தனது இரு
தற்போதைய செய்திகள்இரு சக்கர வாகனத்திலிருந்து விழுந்த போலீஸார் படுகாயம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ராஜாராம் (31). இவர் சிவகாசியில் உள்ள தனி ஆயுதப்படையில் போலீஸாராக உள்ளார். வேலைக்குச் செல்வதற்காக தனது இரு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த போலீஸார் படுகாயம் அடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் ராஜாராம் (31). இவர் சிவகாசியில் உள்ள தனி ஆயுதப்படையில் போலீஸாராக உள்ளார். வேலைக்குச் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில், கிருஷ்ணன்கோவில்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். பட்டத்தரசியம்மன்கோவில் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததையடுத்து நிலை வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமுற்ற அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.