சிதம்பரத்தில் கந்தசஷ்டி சூரசம்ஹாரவிழா!
ஸ்ரீநடராஜர் கோயில் மேலகோபுர வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீமுத்துக்குமரப் பெருமான் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கடந்த நவ.22-ம் தேதி தொடங்கியது.
சிதம்பரத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நவவீரர்கள் வீதிஉலா இன்று நடைபெற்றது.
ஸ்ரீநடராஜர் கோயில் மேலகோபுர வாயிலில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீமுத்துக்குமரப் பெருமான் கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கடந்த நவ.22-ம் தேதி தொடங்கியது. தினந்தோறும் முருகன் பெருமைகள் குறித்து ஆன்மீக சொற்பொழிவுகள், சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முனைவர் ரா.அன்பழகன், புலவர் தி.பொன்னம்பலம், தமிழாசிரியர்கள் ச.விநாயகம், ரா.கருணாநிதி, பி.செல்வம், ஜி.சுந்தரி, மா.ஆறுமுகம் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றினர்.
இன்று மாலை சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு செங்குந்த மரபினர்கள் நவவீரர்கள் வேடமணிந்து பாவாமுதலியார் தெருவிலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீநடராஜர் கோயிலுக்கு சென்றடைந்தனர். அங்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 9 மணிக்கு சிதம்பரம் தெற்குரதவீதியில் சூரணை, முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் காட்சி வெகுசிறப்பாக நடைபெற்றது. திரளான பொதுமக்கள் பங்கேற்று மகாசூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
பின்னர் இரவு சூரனை சம்ஹாரம் செய்தபிறகு வெள்ளிமயில் வாகனத்தில் ஸ்ரீமுத்துக்குமர பெருமான் செங்குந்த நவவீர்கள் புடைசூழ வீதியுலா வந்தார். சூரசம்ஹார நிகழ்ச்சியை தி.பொன்னம்பலம் வர்ணனை செய்தார். இந்நிகழ்ச்சியில் செங்குந்தர் பரம்பரை டிரஸ்டி தில்லை.ராஜ்நடராஜ் செங்குந்தர், ரத்தின.நடராஜன், சி.பி.கே.ஸ்ரீதரன், அ.விஸ்வநாதன், பி.குமார், சி.பி.ஆர்.சிவராஜன், எஸ்.குப்புசாமி, பொறியாளர் சிவசங்கரன், பி.எஸ்.சபாரத்தினம், கே.முருகேசன், க.தில்லைகோவிந்தன், பழனிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை செங்குந்த மரபினர் மற்றும் கோயில் பொதுதீட்சிதர்கள் செய்திருந்தனர். நவ.28-ம் தேதி தேவசபை எனும் பேரம்பலத்தில் வேடமங்கை வேழவேங்கை வேலவர் திருக்கல்யாண மஹோற்சவம் நடைபெறுகிறது.