முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: இருவர் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்து குற்றவாளிகள் இருவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:32 AM
பகிர்:

புதுச்சேரியில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட வந்து குற்றவாளிகள் இருவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

புதுச்சேரி பெரியகாட்டுகுப்பத்தில் கடந்த நவ.19-ம் தேதி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் மனோகர் என்பவர் ஒருகும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை போலீஸார் 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வந்தனர். இந்நிலையில் இக்கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த அழகர் (38), சிலம்பரசன் (36) ஆகிய இருவர் வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில், நீதிபதி பரமசிவம் முன்பு சரணடைந்தனர். சரணடைந்த இருவரையும், நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து இருவரும் கடலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.