முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி தில்லைக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி நகர அதிமுக சார்பில் சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி நகர அதிமுக சார்பில் சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது.

ஜெயலலிதா விடுதலையாக வேண்டி நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர் தலைமையில் சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.

கோயிலினுள் வீற்றுள்ள ஸ்ரீதில்லையம்மன், ஸ்ரீதில்லைக்காளியம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, நாக.முருகுமாறன் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலர் சொ.ஜவகர், நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், தலைமைக்கழக பேச்சாளர் தில்லை கோபி, தில்லை செல்வம், நகர பேரவை செயலாளர் பன்னீர்செல்வம், சிவராமதீட்சிதர், பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவர் திருமாறன் உள்ளிட்டோர் பங்கேற்று பிராத்தனை செய்து பிரசாதத்தை பெற்றுக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments