கோவை அருகே மகளுக்கு பாலியல் வன்கொடுமை: தந்தை கைது
தாம் பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம் பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் ராமய்யா. இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் தங்களது 2வது மகள் உமாவுடன்(வயது 20) அண்மையில், கோவை சூலூர் அருகே குடியேறினர். ராமய்யாவும் உமாவும் அருகே ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள முதல் மகளைப் பார்க்க மாரியம்மாள் சென்றிருந்த போது, வீட்டில் தனியாக இருந்த உமாவை, ராமய்யா, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமா அளித்த புகாரின் பேரில், போலீசார், ராமய்யாவை கைது செய்தனர்.