விருதுநகர் அருகே சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி: பெண் தீக்குளிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக மனம் வேதனை அடைந்த 23 வயது பெண் வெள்ளிக்கிழமை
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக மனம் வேதனை அடைந்த 23 வயது பெண் வெள்ளிக்கிழமை தீக்குளித்து படுகாயம் அடைந்தார்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே என்.முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி சித்ராதேவி(23). இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதிலிருந்தே வருத்தத்துடனும், கடுமையான மன வேதனையுடனும் இருந்து வந்தாராம்.
இதனால், மேலும் மனம் உடைந்த சித்ராதேவி கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டிற்குள் சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டாராம்.
Advertisement
இதையடுத்து, அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இது தொடர்பாக நரிக்குடி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.