நந்தனார் குருபூஜை அன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை
நந்தனார் குருபூஜையை முன்னிட்டு அன்றைய தினம் மதுக்கடைகளை மூட வேண்டும் என நந்தனார் ஆய்வு மைய அமைப்பாளர் ரா.காவியச்செல்வன், சிதம்பரம் உதவிஆட்சிரியடம் கோரிக்கை விடுத்து கடிதம் கொடுத்துள்ளார்.
நந்தனார் குருபூஜையை முன்னிட்டு அன்றைய தினம் மதுக்கடைகளை மூட வேண்டும் என நந்தனார் ஆய்வு மைய அமைப்பாளர் ரா.காவியச்செல்வன், சிதம்பரம் உதவிஆட்சிரியடம் கோரிக்கை விடுத்து கடிதம் கொடுத்துள்ளார்.
கடித விவரம்:
தமிழகத்தின் வடமாவட்டங்களில் சாதிய இழிவு, தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், சமூகநீதியை நிலை நாட்ட ஆலய நுழைவு போராட்டத்தின் வழி நின்று அடக்குமுறையை வென்றெடுத்த உரிமை மீட்பு போராளியாக திகழ்ந்தவரும், நாயன்மார்களில் ஒருவரானவர் நந்தனார். தமிழக சைவ வரலாற்றில் சைவ நெறிமுறை பின்பற்றியும் பரப்புரை செய்தவருமான திருநாளைப் போவார் என்ற பெயர் பெற்றவர் நந்தனார். இவரது குருபூஜை வருகிற அக்.12-ம் தேதி சிதம்பரத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. காந்தி, வள்ளலார் போன்ற மகான்கள் பிறந்த தினத்தில் மதுபானக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளிப்பது போல், நந்தனார் குருபூஜை அன்று அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கடிதத்தில் ரா.காவியச்செல்வன் தெரிவித்துள்ளார்.