எனது கேப்டன்சி பயணத்தில் கடைசி 3 மாதங்கள் மிகவும் கடினமானவை: பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்து அணியின் கேப்டனாக கடந்த மூன்று மாதங்கள் தனது பயணம் மிகவும் கடினமாக இருந்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் கேப்டனாக கடந்த மூன்று மாதங்கள் தனது பயணம் மிகவும் கடினமாக இருந்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன் பின், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக கடந்த மூன்று மாதங்கள் தனது பயணம் மிகவும் கடினமாக இருந்ததாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பென் ஸ்டோக்ஸ் பதிவிட்டிருப்பதாவது: இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்படுவதை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை நான் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கேப்டனாக என்னுடைய இந்த பயணத்தில் நிறைய ஏற்ற, இறக்கங்கள் இருந்துள்ளன. என்னுடைய கேப்டன்சி பயணத்தில் கடந்த மூன்று மாதங்கள் மிகவும் கடினமானவை. கடந்த மூன்று மாதங்களில் நான் பல்வேறு சோதனைகளுக்கு ஆளானேன். இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட அனைவரும் இந்த காலக் கட்டத்தை கண்டிப்பாக கடந்து வந்திருப்பார்கள் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.
பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லமுடன் இணைந்து இங்கிலாந்து அணியை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். எங்களுடைய அனைத்து உழைப்பையும் கொடுக்கப் போகிறோம். எங்களுடைய இந்த பயணத்தில் நிறைய தவறுகள் செய்துள்ளோம். அந்த தவறுகளிலிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளோம். வெற்றியைக் காட்டிலும் தோல்வியிலிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும் எனப் பதிவிட்டுள்ளார்.