விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பொருள்கள் திருட்டு
விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 4 சவரன் நகை உள்ளிட்ட ரூ.1.30 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேயிருந்த 4 சவரன் நகை உள்ளிட்ட ரூ.1.30 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் படேல் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (55). இவர் தனது மனைவியுடன், பெங்களூருவில் வசித்து வரும் மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு கடந்த 4 நாள்களுக்கு முன்பு சென்றுள்ளார். அவரது மகனும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், பெங்களூருவிலிருந்து வியாழக்கிழமை இரவு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
Advertisement
பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்து 4 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் வீட்டில் இருந்த எல்.சி.டி டிவி ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் சந்தோஷ்குமார் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.