தொடர் மழை : அணைகளின் நீர்மட்ட நிலவரம்
திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் அதிகபட்சமாக
திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் அதிகபட்சமாக 133 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 65 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 74.8 மி.மீ மழையும் பெய்துள்ளது. இதனையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2,760.88 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 775 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து பாபநாசம் அணையின் நீர்மட்டம் 4.60 அடி உயர்ந்து அணையின் நீர்மட்டம் 67.65 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3.28 அடி உயர்ந்து 78.94 அடியாகவும்,
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 56.20 அடியாகவும் இருந்தது.
பாபநாசம் அணை மூடல்: நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பதால் மணிமுத்தாறு, கடனாநதி அணைகள் மூடப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை பாபநாசம் அணையும் மூடப்பட்டது. பாபநாசம் கீழ் அணையில் 140 மி.மீ மழை பெய்துள்ளதால் அகஸ்தியர் அருவி வழக்கத்தை விட நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாசனக் கால்வாய்களில் நீர்வரத்து கணிசமாக செல்கிறது.
நீர்மட்டம் நிலவரம்: கடனாநதி அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 53.50 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 74.85 கனஅடி நீர்வரத்து இருந்தது. ராமநதி அணையின் நீர்மட்டம் 3.50 அடி உயர்ந்து 51.00 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 74.58 கனஅடி நீர்வரத்து இருந்தது.
கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 38.39 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 109.50 அடியாகவும், வடக்குபச்சையாறு அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 7.00 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 10.95 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 4.00 அடியாகவும் இருந்தது.